இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

27. இரத்தப் பணம்


அப்துல்லாபுரம்.

அந்த ஊரில் ஆயிரம் வீடுகள் இருந்தன. ஆயிரத்தில் 990 வீடுகளில் முஸ்லிம் குடும்பத்தினர் வசித்தனர். அனைவருமேத் தமிழ் பேசும் முஸ்லிம்கள். ஒரு சுன்னத் ஜமாத் பள்ளிவாசலும், ஒரு தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசலும், ஒரு ஜாக் பள்ளிவாசலும் இருந்தன. அப்துல்லாபுரம் ஊரில் முஸ்லிம்களில் 90 சதவீதம் பேர் சுன்னத் ஜமாத் மஹல்லாவுக்கு கட்டுப்பட்டவர்களே. ஊர் முஸ்லிம் ஆண்களில் பெரும்பாலானோர் வியாபாரிகளாக இருந்தனர்.

ஓட்டி வந்த பைக்கை ஸ்டாண்டிட்டு நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நடந்தான் முகமது அசாமத். வீட்டின் இடது பக்கம் அந்த ஆட்டுக்கிடா கட்டிப் போடப்பட்டிருந்தது. அதன் உடம்பில் கருப்பும் செங்கல் நிறமும் பரவியிருந்தன. கூர்மையான இரு கொம்புகள். ஆடு நின்றிருந்த இடம் முழுக்க ஆட்டுப் புழுக்கைகள் பரவிக் கிடந்தன. ஆடு தின்ன அகத்திக்கீரை கட்டு போட்டிருந்தனர். ஆடு குடிக்க ஒரு பெரிய பக்கெட்டில் தண்ணீர் நிறைத்திருந்தனர்.

ஏறக்குறைய 7 மாதங்களாக அவர்கள் வீட்டில் அந்த ஆடு வளர்கிறது. சந்தையில் வாங்கும் போது அது 40 நாள் குட்டி. இப்போது அந்த ஆடு 16. 5 கிலோ எடை இருக்கிறது. முகமது அசாமத்தின் மகன் ஐயாத் முகமது 12 வயது சிறுவன். அவன்தான் அந்த ஆட்டைப் போஷாக்காகக் கவனிக்கிறான். காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் ஆட்டை வாக்கிங் கூட்டிப் போய் மேய விடுவான். ஆட்டிற்கு பெயர் ‘நாடிக்’ என வைத்திருந்தான். நாடிக்குக்கு முகமது அசாமத் பேசும் தமிழ் நன்றாகப் புரியும். நாடிக் பாச மிகுதியால் ஐயாத் முகமதின் கைகளை நக்கும். வாக்சல்யமாய் ‘ம்பே ம்பே’ என மிழற்றும்.


முகமது அசாமத் மகனிடம் “மகனே! நாடிக் மீது அதிகப் பாசத்தை வைக்காதே. இன்னும் ஒன்றரை மாசத்திலப் பக்ரீத் வரப்போகுது. பக்ரீத்துக்கு நாடிக்கைத்தான் குர்பானி கொடுக்கப் போறோம்…”

“நாடிக்கை நாம்பளே வளத்துக்கிட்டு குர்பானிக்கு முந்தின நாள் புதுசா ஒரு ஆடு வாங்கிக்கக் கூடாதா?”

சிரித்தான் முகமது அசாமத்.

“புரியாமப் பேசாதே. நமக்குப் பிரியமான ஒன்றைத்தானே, நாம் குர்பானி கொடுக்க வேண்டும். பிறந்த உயிர்கள் அனைத்தும் மரணிக்கத்தானே வேண்டும். குர்பானி கொடுக்கும் வரை நாடிக்கை நீ எப்படிக் கவனித்துக் கொள்ள வேண்டும் தெரியுமா?”

“எப்படி?”

“தினம் நாடிக்கை குளிக்க வை. நாடிக்கின் வயிறு முட்ட உணவு கொடு. நாடிக்கின் உடம்பிலோ, கொம்பிலோ எவ்வகை ஒச்சமும் ஏற்படாமல் பார்த்துக் கொள். இரவில் திருடர்கள் யாரும் வந்து நாடிக்கைத் திருடிப் போய் விடாமல் பத்திரமாகப் பார்த்துக் கொள். அக்கம்பக்கத்து குர்பானி ஆடுகளுடன் உன் ஆட்டை ஒப்பிடாதே. உன் ஆட்டைப் பற்றி யாரிடமும் பெருமையடித்துக் கொள்ளாதே. ஆட்டுக்கு எந்த நோயும் தொற்றிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்…”

“சரிங்கத்தா”

“இன்னைக்கி உனக்கு ஸ்கூல் லீவுதானே? ஆட்டை எங்காவது மேய்ச்சலுக்குக் கூட்டிட்டுப் போயிட்டு மதியம் கொண்டு வந்து கட்டு”

“ஓகே டன்”


நாடிக்கை இழுத்துக் கொண்டு ஊருக்கு வெளியே நடந்தான் ஐயாத் முகமது. நாடிக்கின் கழுத்து சலங்கை சப்தம் ஜலக்ஜலக் என்றது. ஆட்டின் மீதிருந்து ஒரு மெல்லிய நாற்றம் கிளர்ந்தது. திவ்யமாக நாசிகளுக்குள் இழுத்து உயிர்த்தான் ஐயாத். நாடிக்கின் வாயிலிருந்தும் நாசித் துவாரங்களிலிருந்தும் சளித்திரவம் நூலாய்ச் சொட்டியது. இருபது அடி நீளமுள்ள கயிற்றைத் தளர்த்திவிட்டு நாடிக்கைப் புல் மேய விட்டான் ஐயாத். மரத்தடியில் அமர்ந்து வாண்டுமாமா கதை ஒன்றைப் படிக்க ஆரம்பித்தான்.

அரைமணி நேரம் நகர்ந்தது.

நாடிக்கின் பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுக்கும் நாடிக்குக்கும் சண்டை மூண்டது. கொம்புகளால் டங்கார் டங்கார் என மோதிக் கொண்டன.

சண்டையை விலக்க எழுந்தோடினான் ஐயாத்.

அதற்குள் கழுத்துக்கயிற்றை அறுத்துக் கொண்டு தலைதெறிக்க ஓட ஆரம்பித்தது நாடிக்.

“நாடிக், ஓடாதே நில்! நாடிக் நாடிக்”

நாடிக் அசுர வேகத்தில் ஓடியது.

பிரதான சாலையில் ஏறித் தாவியது. நூறு கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு சிவப்புநிற பெர்ராரி ரோமா சீறி சினந்தது. கார் நாடிக்கை முட்டி மோதி செந்தூக்காய் சிதற்றியது. நாடிக் இருபதடி தூரம் பறந்து தரைச்சாலையில் சொத்தேறியது. இரத்தச்சேற்றில் உயிர் நீத்து கண்கள் ஏகாந்தத்தில் நிலைத்தன.

வீரிட்டான் ஐயாத். “நாடீக்”

கார் சறுக்கி நின்றது.

தரை தேய்த்து முழங்காலிட்டு நாடிக்கை தூக்கிக் கதறினான். இரத்தம் பூசிய கைகளால் முகத்தை அறைந்து கொண்டான்.

காரிலிருந்து 32 வயது இளைஞன் இறங்கினான். “அடடா.. வண்டிக்குக் குறுக்கால பாஞ்சு ஆடு வண்டி மேல மோதிருச்சு. ஆடு இறந்திருச்சு போல. ஆடு உன் ஆடாப்பா?”

“யோவ், அநியாயமா பேய் ஸ்பீடுல வந்து என் ஆட்டைக் கொன்னுட்டியே… நீ நல்லாருப்பியா?”

“சரிப்பா.. எதிர்பாராம எல்லாம் ஒரு பிராக்சன் ஆப் செகன்ட்ல நடந்துப் போச்சு. பெரியவங்களை வரச் சொல்லு. பேசி நஷ்டஈடு கொடுக்கிறேன்!”

“என்கிட்ட போன் இல்லை. எங்கத்தா நம்பரைச் சொல்றேன், போட்டுக் கொடு…”

பத்து இலக்க எண்ணை அமுக்கி ஐயாத்திடம் கொடுத்தான். “த்தா த்தா! நம்ம நாடிக்கை ஒரு கார்காரன் மோதிக் கொன்னுட்டான்… மெயின்ரோட்டுக்கு உடனே ஓடி வாங்க!”

அடுத்தப் பத்து நிமிடங்களில், இரண்டு சக்கர வாகனங்களில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் வந்து சேர்ந்தனர். அதில் ஐயாத்தின் அத்தாவும் பள்ளிவாசல் முத்தவல்லியும் இமாமும் இருந்தனர்.


சில ஊர்க்காரர்கள் கார் ஓட்டி வந்தவனின் கோட்டைக் கழற்றித் தரையில் அடித்தனர். அவனை இழுத்துப் போய் ஒரு மரத்தில் கட்டினர்.

முத்தவல்லி வினவினார். “யாருய்யா நீ? உன் பேரென்ன?”

“பாய்! நான் ஒரு தொழிலதிபர். பொள்ளாச்சிக்கு வியாபார விஷயமாகப் பேசப் போய்க் கொண்டிருக்கிறேன். என் பெயர் கார்த்திக் திலகன். நடந்தததை விசாரிக்காமல் என்னை இப்டிக் கட்டிப் போட்டது, சரியா?”

“சரி என்ன நடந்தது சொல்லு?”

“கண் இமைக்கும் நேரத்தில் ஆடு தாறுமாறான வேகத்தில் சாலையை ஊடுருவி விட்டது. நான் பிரம்மபிரயத்தனம் பண்ணிப் பாத்தேன். மோதலைத் தடுக்க முடியவில்லை. ஆட்டுக்குரிய நஷ்டஈட்டைச் சொல்லுங்கள்… தருகிறேன்”

“நீ மோதினது சாதா ஆடு இல்ல, குர்பானி கொடுக்க நேர்ந்து விடப்பட்ட ஆடு அது. உனக்குப் புரியுற மாதிரி சொல்லனுன்னா அது சாமி ஆடு”

“உங்கள் மதச் சடங்குகளைப் பெரிதும் மதிக்கிறேன். நடந்த விபத்துக்கு நான் உளமார உங்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். ஆட்டுக்கு ஒரு இருபதாயிரம் ரூபாய் நஷ்டஈடு கொடுக்கட்டுமா?”

குழுமியிருந்த ஊர்காரர்களில் ஒருத்தன் குதித்தான். “காசுத் திமிர்ல பேசுறியா? உன்னைச் சோறு தண்ணி குடுக்காம மரத்தில் ஒரு வாரம் கட்டிப் போட்டு உன் வாய்க் கொழுப்பைக் குறைக்கனும்”

“போலீஸைப் போன் பண்ணி வரச் சொல்லவா? அவங்க வந்து எதை செஞ்சாலும் நான் ஒத்துக்கிறேன்”

“எங்க ஊர்ல போலீஸுக்கு வேலை இல்லை. தண்டனையோ, பரிசோ எங்கப் பள்ளி முத்தவல்லிதான் தருவார்”

“நான் என் அதிகாரத்தையோ, பணத்தையோ இந்தச் சம்பவத்தில் முன் நிறுத்தவில்லை. கொஞ்சம் இறங்கி வாருங்கள். ஆட்டுக்கு நஷ்ட ஈடு முப்பதாயிரம் தரட்டுமா? வேற நல்ல ஆடு வாங்கி குர்பானி கொடுக்கட்டும்”

“ஆட்டுக்குப் பெயர் சூட்டி ஏழெட்டு மாசம் அன்பா வளர்த்தாங்களே, ஒரு புள்ளை மாதிரி. அதைக் கொலை பண்ணிட்டியே… அந்த உயிருக்கு உன் முப்பதாயிரம் பிச்சைக்காசு ஈடாகுமா?”

“வேற என்னதான் பண்ணச் சொல்றீங்க?”

“அரபு நாடுகளில் ஒரு கொலை நடந்து போச்சுன்னா கொலையாளியை மன்னிக்க, கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் ஒரு தொகை கேட்பார்கள். அந்தத் தொகையை ப்ளட் மணி அல்லது இரத்தக் காசு என்பர். நீ என்ன பண்ற? ஆட்டை இழந்த முகமது அசாமத்துக்கு அஞ்சு லட்சம் ரூபாய் இரத்தக் காசு கொடு”

“ஒரு ஆட்டுக்கு அஞ்சு லட்ச ரூபாய் அதிகம்…”

“நீ காசைக் குடுக்கலேன்னா ஆயுளுக்கும் நினைச்சு நினைச்சு வேதனைப்படுற மாதிரி அவமானங்களைச் சந்திப்ப”

வாக்குவாதம் நீண்டு இரத்தக் காசு மூன்று லட்சம் கொடுப்பது என முடிவானது.


இதுவரை பேசாமல் இருந்த முகமது அசாமத் வாய் திறந்தான். “என் ஆடு மோதி, கார்த்திக் திலகன் காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. ஆடு மோதின வேகத்தில் கார் திசை திரும்பி எதன் மீதாவது மோதி திலகன் இறந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. நடந்தது ஒரு எதிர்பாராத விபத்து. இதுதான் வாய்ப்பு என்று அவரிடம் மூன்று லட்சம் கேட்பது பேராசை. அவரை அவிழ்த்து விடுங்கள். அவர் ஒரு பைசா கூட நஷ்டஈடு தர வேண்டாம்… அவர் சுதந்திரமாகக் கிளம்பிச் செல்லட்டும். இறந்து போன ஆட்டை புதைத்துவிட்டு, குர்பானிக்கு புது ஆடு வாங்கிக் கொள்கிறேன்…. மனிதாபிமானம் இருக்கும் இடத்தில்தான் மதம் சிறக்கும்”

அரைமனதாய்க் கட்டை அவிழ்த்து விட்டனர்.

கார்த்திக் திலகனைக் கட்டியணைத்துக் கொண்டான் முகமது அசாமத். “உங்கள் காரைப் பழுது பார்க்க நான் எதுவும் நஷ்ட ஈடு தரட்டுமா?”

“உங்களின் பரிசுத்தமான அன்பு என் இதயத்தை நிறைத்து விட்டது. எதுவும் வேண்டாம்…”

மீண்டும் கார்த்திக் திலகன் கார் ஓட்டிச் செல்வதைப் பெருமிதமாய் கண்ணுற்றான் முகமதுஅசாமத்.

புதிதாய் ஒரு கிடா வாங்கி மகனிடம் கொடுத்தான் முகமது அசாமத்.

“இதன் பெயர் ஹப்ரூர்”

பக்ரீத் அன்று ஊர்மக்கள் அனைவருக்கும் தலா ஒரு கிலோ ஸ்வீட் பாக்ஸ் வழங்கி, பள்ளிவாசலில் நூலகம் கட்ட 10 லட்சம் ரூபாய் காசோலையும் பரிசளித்தான் கார்த்திக் திலகன்.

“விட்டுக் கொடுத்தலும் மத நல்லிணக்கமும் மனித நேயமும் இந்த பக்ரீத் பெருநாளில் தழைத்தோங்கட்டும்” என்றனர் குழுவாக...!

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p27.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License