இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

28. சதக்கா உண்டியல்


ராபியத்துல் பசரியா மேல்நிலைப்பள்ளி. இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஓட்டி வந்த சைக்கிளை நிறுத்திப் பூட்டினாள் அதீபா. புத்தகப் பையை எடுத்து முதுகில் கோர்த்துக் கொண்டாள். ஹிஜாப்பை சரி செய்து கொண்டாள்.

அதீபா வயது 12. ஏழாம் வகுப்பு படிக்கிறாள். ஈரானியப் பெண்கள் போல பிங்க் இடத்தில் இருப்பாள். ஆர்வக்கண்கள். ஹைப்பூன் மூக்கு. சதா மார்க்க விஷயங்களை பேசும் வாய். பச்சை நிற சீருடை அணிந்திருந்தாள். கருப்பு நிறக் காற்சட்டை. கால்களில் ஷூ. இடுப்பில் பெல்ட். வகுப்பறைக்குள் பிரவேசித்தாள்.

தோழிகள் வரவேற்றனர்.

“அஸ்ஸலாமு அலைக்கும்”

“வஅலைக்கும் ஸலாம்”

வகுப்பு தொடங்க இன்னும் அரை மணி நேரம் இருந்தது. அதனால் அதீபா தனது நெருக்கமான தோழிகளுடன் வட்டம் கட்டி அமர்ந்து கதைக்க ஆரம்பித்தாள்.

“பக்ரீத்துக்கு ஆடு வாங்கியாச்சா. பரீய்யா?”

“வாங்கியாச்சே…. எங்கக் கொல்லைப்புறத்தில் கட்டிப் போட்டு கவனிச்சிக்கிரம். உங்க வீட்டில வாங்கியாச்சா?”

“இனிமேல் தான் வாங்கனும். தனியா குர்பானிக்கு எங்கத்தா ஆடு வாங்கா விட்டாலும் கூட்டு குர்பானிக்கு பணம் கட்டிவிடுவார்”

“கூட்டுக் குர்பானி எங்கத்தாவுக்கு அறவேப் பிடிக்காது”

“நீ பெரும் பணக்காரி… எதை விரும்பினாலும் செய்யக் கையிலக் காசு இருக்கு. நாங்க அப்படியா? நாங்க அன்றாடங்காச்சிகள்”

“நீ மனதால் கோடீஸ்வரி”

“என்னைச் சமாதானப்படுத்த அப்படிச் சொல்லாதே...”

“சரி விடு… வேற பேசுவோம்….” என்ற பரீய்யா மந்திரவாதி கறுப்புத் தொப்பியிலிருந்து முயலை எடுப்பது போல, தனது இடது கையைத் தோழிகளின் நடுவில் நீட்டினாள்.


மணிக்கட்டில் ஒரு தங்க நிற வாட்ச்.

ஊப்

ஏ அப்பா

மாஷா அல்லாஹ்!

“வாவ், ஏதுடி மஞ்சள் கலர்ல டாலடிக்குது?”

“நேத்து எங்கத்தா வாங்கிட்டு வந்து பிரசன்ட் பண்ணினார். நாலஞ்சு வருஷம் கட்டு. காலேஜுக்குப் போறப்ப அய்யாயிரத்ல சூப்பர் வாட்ச் வாங்கித் தரேன்னு ப்ராமிஸ் பண்ணி இருக்கார்”

“இதென்ன மேக்?”

“ஸோனாடா பிராண்டு. விலை 1200 ரூபாய்”

“ஒரே ஒரு தடவை இந்த வாட்ச்சைத் தொட்டுப் பாத்துக்கட்டுமா?”

“தாராளமா...”

அந்தக் கைக்கடிகாரத்தை வருடிக் கொடுத்தாள், தடவிக் கொடுத்தாள் அதீபா. தனது இடது மணிக்கட்டை வெறித்தாள்.

“உனக்கு அதிர்ஷ்டமில்லையே என் இடதுமணிக்கட்டே...!”

“நான் ஒரு தடவை உன் வாட்ச்சைக் கட்டிப் பார்க்கட்டுமா?”

“நோநோ… எதாவது பண்ணி என் வாட்ச்சை டேமேஜ் பண்ணிராதிங்க. யாருக்கும் தர மாட்டேன். அத்தோடு சிறு விண்ணப்பம். யாரும் என் வாட்ச் மீது கண் போடாதீர்கள்….”

வகுப்பு ஆசிரியை வந்தார்.

அழகிய முகமனுடன் வகுப்புகள் ஆரம்பித்தன.

பள்ளியிலிருந்து வீடு திரும்பிய அதீபா. முகம் கைகால் கழுவி வேறு ஆடைக்கு மாறினாள். அம்மா ஒரு டம்ளரில் தேநீர் கொடுத்தாள்.

மனக்கண்ணில் நொடிக்கு நொடி பரீய்யாவின் ஸோனாட்டா வாட்ச் க்ளோசப்பில் வந்து வந்து போனது.

“நான் பணக்காரிடி. நான் நினைச்சா இடது கைல அஞ்சு வாட்ச்சும், வலது கைல அஞ்சு வாட்ச்சும் கட்டுவேன். உன்னால ஒரு வாட்ச்சோட திருகாணி கூட வாங்க முடியாது”

அடிக்கடி அதீபா, ஸோனாட்டா வாட்ச் ஸோனாட்டா வாட்ச் என முணு முணுத்தாள்.

தனது இடது மணிக்கட்டைத் தடவிப் பார்த்துக் கொண்டாள்.

ஒரு ரப்பர் பான்டை இடது கைவிரல்களுக்குள் நுழைந்து மணிக்கட்டை இறுக்கினாள்.

ஸ்கெட்ச் பேனா எடுத்து மணிக்கட்டில் வாட்ச் படம் வரைந்தாள்.


‘அல்லாஹ்! மலக்குமார்கள் மூலம் வானத்திலிருந்து ஒரு ஸோனாட்டா வாட்ச்சைத் தூக்கிப்போடு. எட்டிப் பிடித்துக் கொள்கிறேன். கையில் வாட்ச் கட்டுவது என்பது பூமி உருண்டையை மினியேச்சர் வடிவமாக்கி, தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது போல. வாட்ச் கட்டியவர்களிடம் சூரியன் சூரியோதயத்துக்கும் அஸ்தமனத்துக்கும் அனுமதி கேட்கும். வாட்ச் ஒரு மணிக்கட்டு கவிதை. வாட்ச் காலத்தின் சிறு விள்ளல். வாட்ச் மனித இதயத்தின் சிறு நகல்’ யோசித்து யோசித்துத் தவித்துப் பரிதவித்தாள்.

அம்மாக்காரி மகளின் அவஸ்தையைப் பார்த்துவிட்டு “என்னடி வெள்ளாட்டை விழுங்கின மலைப்பாம்பு மாதிரி திணர்ற? பள்ளிக்கூடத்ல ஏதாவது பிரச்சனையா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை”

“எதுனாலும் சொல்லு. நான் சரி பண்ணித்தரேன்”

“எனக்கு வயசு பன்னண்டு ஆகுது. அரைப்பொம்பிளை ஆய்ட்டேன். எனக்கு நீ நகைநட்டு செஞ்சு போடலன்னா பரவாமில்லை. ஒரு வாட்ச் வாங்கிக் குடு. ஆசையாக் கட்டிக்கிரேன்னு சொல்வேன்னு பாத்தியா? ஒண்ணுமில்ல விடும்மா”

“முளைச்சு மூணு இலை விடல. அதுக்குள்ள கழுதைக்கு வாட்ச் கேக்குதாக்கும்”

“உன்காலம் வேற, என் காலம் வேற. ஆறு வயசு பிள்ளைக பத்தாயிரம் ரூபா வாட்ச் கட்டுதுக”

“வாட்ச் கட்டுறது அவுட் ஆப் ஃபேஷன்டா. எல்லோரும் செல்லுலதான் டைம் பாத்துக்கிராங்க”

“அப்படிச் சொல்ல முடியாது. 70% மக்கள் இன்னும் வாட்ச் கட்டவேச் செய்கிறார்கள்”

“எது எப்படியோ, என்னால இப்ப ஆயிரம் ரெண்டாயிரம் செலவு பண்ணி உனக்கு வாட்ச் தர முடியாது”

“அத்தாகிட்டக் கேளேன்”

“காச்மூச்சுன்னு கத்துவார்”

“அம்மம்மாகிட்டக் கேளேன்”

“கிழவி என்ன சம்பாதிக்குதா? அது கைல பரம் பைசா கிடையாது”

“அய்யய்யோ மண்டை மூளை முழுக்க வாட்ச் அடைமழை பெய்யுதே” தலையை ஒரு இரு கைகளால் பிடித்துக் கொண்டேப் படுக்கையறைக்குள் ஓடினாள் அதீபா.

முகம் பார்க்கும் கண்ணாடி முன் மேஜை இருந்தது. மேஜையில் ஒரு உண்டியல் இருந்தது. அம்மா அதனை சதக்கா உண்டியல் என்பாள். வீட்டு அங்கத்தினர்கள் கையில் கிடைக்கும் அஞ்சு பத்தை உண்டியலில் போடுவர். உண்டியல் நிறைந்தவுடன் அதிலுள்ள பணத்தை எடுத்து பரம ஏழைகளுக்கு சதக்கா செய்வாள் அம்மா.

ஒவ்வொரு முறை உண்டியல் நிறையும் போதும் அதில் சராசரி ரூபாய் 1500 இருக்கும். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு போய் ஏழை எளியவர்களுக்கு தேவையை அறிந்து கொடுப்பாள் அம்மா.

உண்டியலை எடுத்துப் பார்த்தாள் அதீபா. உண்டியல் நிறைந்திருந்தது. குலுக்கி ஆட்டிப் பார்த்தாள். ஐந்து ரூபாய் பத்து ரூபாய் நாணயம் குலுங்கின.

உள்ளே வந்தாள் அம்மா. “சதக்கா உண்டியலை வச்சு என்னடி பண்ணிக்கிட்ருக்க?”

“உண்டியலை உடைச்சா குறைஞ்சது ஆயிரத்து எரநூறு தேறும். அப்படியேக் கொண்டு போய் வாட்ச் வாங்கி விட வேண்டியதுதான். நூறு தடவை சதக்கா செய்றதுல ஒண்ணு குறைஞ்சா தப்பே இல்லை”


“வாயைக் கழுவுடி. சதக்கா தனிப்பட்ட தாராளச் செயலாகும். தண்ணீர் நெருப்பை அணைப்பது போல சதக்கா பாவத்தை அணைக்கிறது. பணமற்ற தொண்டும் சதக்காதான். கல்விக்கு நிதி உதவி, கிணறு கட்டி தருதல், மரம் நடுதல், மருத்துவமனை, பள்ளி, அனாதை ஆசிரமம் கட்டுதல், அறிவு பரப்பல், தேவைப்படுவோருக்கு அறிவுரை வழங்கல், உணவைப் பகிர்தல், பிறரைப் பார்த்து புன்னகைத்தல், பிறருக்காகப் பிரார்த்தித்தல், நோயாளிகளை நலம் விசாரித்தல் எல்லாமே சதக்காதான்.

‘நிச்சயம், அவர்கள் சதக்கா ஆண், பெண் ஆகியோருக்கு கொடுத்து அல்லாஹ்வுக்கு நல்ல கடனாக கொடுக்கிறார்களோ அவர்களுக்கு அது பன்மடங்கு அதிகரிக்கப்படும். மேலும், அவர்களுக்கு கண்ணியமான நற்கூலியும் உண்டு’ என்கிறது அல்குர்ஆன் 57: 18.

மாலையில் நீ குர்ஆன் படிக்க போகும் மதரஸாவில் சதக்கா உண்டியல் ஒன்று உள்ளதே.

அதை உடைத்து வாட்ச் வாங்குவியா? வீட்டு சதக்கா உண்டியல் என்றால் உனக்கு இளப்பமா? ஒரு படத்தில் வடிவேலு பிச்சைக்காரன் பணத்தை திருடி புரோட்டா பாயா தின்பான். சதக்கா உண்டியலை உடைத்து அந்தக் காசில் வாட்ச் வாங்கிக் கட்டுவது ஏழைகளுக்குச் சேர வேண்டிய பணத்தைத் திருடுவது போல தான். வாட்ச், அத்தா அம்மா தான் வாங்கித் தரணுமா? நீ படிச்சு முடிச்சு வேலைக்கு போன பிறகு வாங்கிக் கட்டு. பிறரின் சொகுசுகளைப் பார்த்து சூடு போட்டுக் கொள்ளாதே”

சதக்கா உண்டியலை தடவி முத்தமிட்டு எடுத்த இடத்தில் வைத்தாள் அதீபா.

“அல்லாஹ்வும் நீயும் மன்னியுங்கள்…” அம்மம்மா எட்டினாள்.

சுருக்குப் பையிலிருந்து எடுத்தக் கசங்கிய நோட்டுகளைப் பேத்தியிடம் நீட்டினாள். “இதுல 1500 இருக்கு. நல்ல வாட்ச்சா வாங்கி கட்டிக்க… பிழைச்சுப் போகட்டும் சதக்கா உண்டியலை உடைக்காம விட்ரு”

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p28.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License