இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

3. துணை இமாம்


தனது கடையின் கடந்த ஒரு மாதக் கணக்கு வழக்கின் பிரிண்ட் அவுட்டை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார் அப்ரார் ஷெரீப். வயது 65. உயரம் 170செமீ. தொழுது தொழுது அவரது உடலிலும் முகத்திலும் தேஜஸ் கூடியிருந்தது. புன்னகை முகம் மருதாணி அப்பிய தாடி அவரது மஹல்லாவில் இருக்கும் பள்ளிவாசலுக்கு அவர்தான் முத்தவல்லி. யார் எந்த உதவி கேட்டாலும் பொருத்தமானவருக்குப் பொருத்தமான உதவி செய்வார். உதட்டில் அல்லாஹ் அல்லாஹ் என உச்சரித்து விட்டு, உள்ளத்தில் கசடுடன் திரிய மாட்டார். அவருக்கு மறுமை எவ்வளவு முக்கியமோ அதே அளவு இம்மையின் வெற்றியும் முக்கியம்.

வெளிவாசலில் யாரோ “பாய்!” என அழைத்தனர்.

வெளிவாசலுக்கு வந்தார் “என்னப்பா?”

“உங்களுக்கு ஒரு கூரியர் வந்திருக்கு!”


கையெழுத்திட்டு அந்தக் கவரை வாங்கினார் முத்தவல்லி. அனுப்புநர் முகவரியைப் பார்த்தார். பள்ளியின் இமாம் ஹுசைன் கனி பாகவிதான் கூரியரை அனுப்பியிருந்தார். பெறுநர் அனுப்புநர் முகவரி தவிர்த்து மீதி இடங்களில் ரோஜாப்பூக்களை வரைந்திருந்தார்.

பாரேன்… சின்ன ஸ்கூல் பையன் மாதிரி ரோஜாப்பூக்கள் வரைஞ்சிருக்காரு…

தினமும்தான் பல தடவை நானும் அவரும் நேராச் சந்திச்சுக்கிறோமே.. விஷயத்தை நேர்ல சொல்லாம எதுக்குக் கூரியர் அனுப்பி இருக்காரு?

இமாம் பதவியை ராஜினாமா பண்ணுகிறாரோ?

மகன் மகள் கல்விச்செலவுக்குப் பணஉதவி கேப்பாரோ?

நேரே சொல்லமுடியாத டெலிகேட் விஷயத்தைக் கடிதத்தில் விரிவாக விளக்கமாக எழுதியிருப்பார்…

கவரைப் பிரித்தார்.


அதில்-

“பள்ளிவாசல் முத்தவல்லி அப்ரார் ஷெரீப் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

சில பல விஷயங்களை நேரில் பேச சங்கோஜப்பட்டுதான் இந்த விரிவான கடிதம் எழுதி இருக்கிறேன்.

நான் இந்தப் பள்ளியில் இமாமாக சேர்ந்து 16வருடங்கள் ஆகின்றன.

சில பல சீர்திருத்தங்களை நம் பள்ளியிலிருந்து ஆரம்பிக்கலாம் என அபிலாஷிக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

இந்தச் சீர்திருத்தங்களை முத்தவல்லியாகிய நீங்கள் நம் பள்ளியில் அமுல்படுத்தினால் வெகுசீக்கிரம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளும் பின்பற்றும்.

நான் விரும்பும் சீர்திருத்தங்களை பத்து அம்சங்களாகக் கீழே விரித்துள்ளேன்.

1. பொதுவாக ஒரு பள்ளியில் ஒரு இமாமும் ஒரு மோதினாரும் இருப்பார்கள். இருவருமேப் பள்ளிவாசலுக்கு நேர்ந்து விடபட்டவர்கள் போல 24மணி நேரமும் பள்ளியில் இருக்க வேண்டியிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் கொத்தடிமைகள். பள்ளிவாசல் பணி தவிர, வேறு பணிகளே அவர்களுக்கு இருக்காதா? அவர்களுக்கென்று தனித்தனியாக குடும்பங்கள் இருக்காதா? மனைவியோடும் குழந்தைகளோடும் அவர்கள் சில மணி நேரம் செலவு பண்ண விரும்பமாட்டார்களா? அரசுப் பணியில் இருப்பவர்களுக்கும் தனியார் பணியில் இருப்பவர்களுக்கும் வாரவிடுமுறை, சிறுவிடுப்பு, மருத்துவவிடுப்பு, ஈட்டிய விடுப்பு, ஈட்டல் இல்லாத விடுப்பு என பல விடுப்புகள் அனுமதிக்கப்படுகின்றன. பள்ளி இமாமுக்கும் மோதினாருக்கும் வாரம் ஒரு நாள் விடுமுறை தாருங்கள். வருடத்திற்கு 12நாள் சிறுவிடுப்பு 7நாள் மருத்துவவிடுப்பு அனுமதியுங்கள்.

2. பள்ளிவாசலுக்கு ஒரு துணை இமாமை நியமியுங்கள். அவர் ஆலிம் படிப்பை முடித்து ஐந்து வருடங்கள் தாண்டாமல் இருக்கட்டும். சுழற்சி முறையில் நான், துணை இமாம், மோதினார் வாரவிடுமுறை எடுத்துக் கொள்கிறோம். நான் வாரவிடுமுறையை ஞாயிறு அன்று அனுபவித்தால், துணை இமாம் வியாழன் அன்று, மோதினார் செவ்வாய் அன்று அனுபவிக்கட்டும். மாதத்தில் ஒரு நாள் ஜும்ஆ தொழுகையை துணை இமாம் நடத்தட்டும்.

3. மோதினாராக ஒரு இளம்நிலை ஆலிமை நியமியுங்கள். இமாமும் துணை இமாமும் இல்லாத நாட்களில் தொழுகையை அவர் நடத்தும் திறன் அவருக்கு அமைந்திருக்க வேண்டும். இமாம், மோதினார், துணை இமாம் மூவருமே சமமான அதிகாரம் கொண்டவர்கள் யாரும் யாரின் மீதும் உப்பு மூட்டை ஏறக்கூடாது.

4. எங்களுக்குத் தரப்படும் சம்பளம் அரசுப்பணி ப்யூனின் சம்பளத்துக்கு சமமாகவாகவது இருக்கட்டும். வருடாவருடம் எங்களுக்கு இன்கிரிமென்ட் தாருங்கள். ரம்ஜானுக்கு ரம்ஜான் எங்களுக்குப் போனஸ் கொடுங்கள்.

5. வருடத்திற்கு ஒரு முறை எங்களுக்கு முழு உடல் பரிசோதனை பல் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

6. நாங்கள் மார்க்கத்தைப் பற்றி கட்டுரைகளோ, கதைகளோ, கவிதைகளோ எழுதியிருந்தால் அவற்றைப் பள்ளிவாசல் செலவில் பதிப்பியுங்கள்.

7. வருடத்திற்கு ஒரு முறை நாங்கள் குடும்பத்துடன் நூறு கிலோ மீட்டர் தூரத்திற்குள் சுற்றுலா சென்று வர ஸ்பான்ஸர் செய்யுங்கள்.

8. எங்கள் மகன் மகள் மேற்படிப்புக்குக் கல்விக்கடன் சிபாரிசு செய்யுங்கள்.

9. பள்ளி நிர்வாகிகள் கூட்டத்தில் இமாம், துணைஇமாம், மோதினார் பங்கு பெற்று கருத்துகளை சமமாய்ப் பகிர்ந்து கொள்ள ஆவண செய்யுங்கள்.

10. எங்களது ஜும்ஆ பயான்களை யூட்யூப்பில் பதிவிட அனுமதியுங்கள்.

இப்போதைக்கு இது போதும் என நம்புகிறேன்.

என்னுடைய கடிதம் அதிகப் பிரசங்கிதனமானது எனக் கருதிவிடாதீர்கள். இறைப்பணி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் ஓய்வும். இறைப்பணி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மனைவியும் குழந்தைகளும்.

இமாம் பணியின் இறுக்கத்தை தளர்த்துங்கள். அவரவரின் ஆசாபாசங்களை தலை முழுக வேண்டும். நாம் மட்டும் வசதி வாய்ப்புகளில் சுகபோகங்களில் திளைப்போம் என்கிற சுயநலம் கூடவே கூடாது.

இமாம் ஒரு பொம்மலாட்டப் பொம்மை அல்ல. அவரைப் பல கயிறுகள் கொண்டு ஆட்டுவிக்க. இமாம்களுக்கு போதியச் சுதந்திரமும் சம்பளமும் கொடுத்துப் பாருங்கள். இமாம் பணிக்கு மிக சிறப்பானவர்களாகப் போதுமான அளவுக்குக் கிடைப்பார்கள்.

நான் கேட்ட பத்து அம்சங்களில் குறைந்தது ஐந்து அம்சங்களையாவது நிறைவேற்றித் தந்தீர்கள் என்றால் மிக மகிழ்வேன்.

நாம் செய்து கொடுத்தால் பிற மஹல்லா முத்தவல்லிகளுக்கு மறைமுக நெருக்கடி ஏற்படுமோ என ஐயுறாதீர்கள்.

இறைவனுக்கு உவப்பானது என நம்பினால் தைரியமாக இந்தச் சீர்திருத்தங்களைக் கையில் எடுங்கள் நன்றி வஸ்ஸலாம்.

இடம்: கோவை. என்றென்றும் இறைப்பணியில்

நாள்: 11.01.2023. இமாம் ஹுசைன் கனி பாகவி


- கடிதத்தை முத்தவல்லி தன் முகத்தில் பொத்தினாற் போல வைத்து யோசித்தார்.

நிர்வாகிகள் கூட்டம் ஆரம்பித்தது.

இமாமின் கடிதத்தை நிர்வாகிகள் அனைவரும் படித்தனர்.

பொருளாளர் “என்ன முத்தவல்லி... நம்ம இமாம், இமாம் பணிக்கு முன் கம்யூனிஸ்ட் கட்சில இருந்திருப்பாரோ?”

“நியாயத்தை கேட்டா கம்யூனிஸ்ட் முத்திரையா?”

“இப்ப நாம வசூலிக்கிற சந்தா தொகையை வைத்துப் பள்ளிவாசல் வரவு செலவைக் கவனிக்க விழி பிதுங்குது. இமாம் சொல்றதை எல்லாம் செய்யனும்னா சந்தாத் தொகையை இரட்டிப்பாக்கனும் அல்லது மும்மடங்காக்கனும். மக்கள் கொடுக்க மாட்டாங்க!”

“யதார்த்தத்தை ஜமாஅத் மக்களுக்கு விளக்கிச் சொல்லி, சந்தாவை இரட்டிப்பு ஆக்குவோம். இமாம், துணைஇமாம், மோதினாருக்குத் தரவேண்டிய சில சலுகைகளுக்கு நாமே சில ஸ்பான்ஸர்களை பிடிப்போம்...”

“துணை இமாம் நியமிச்சா ஆறேழு மாசத்திலயே இமாமுக்கும் துணை இமாமுக்கும் ஈகோயுத்தம் ஆரம்பிச்சிடும்”

“எப்பவும் நெகடிவ்வா யோசிக்கக்கூடாது, பாசிட்டிவ்வா பார்ப்போம். 16 வருஷ சர்வீஸ் கொண்ட சீனியர் இமாமை இளையவர் குருவாகத்தான் பாவிப்பார். பொறுப்பைப் பகிர்ந்தளிக்க மூத்தவர் தயாராக இருக்கும் போது எப்படி ஈகோ யுத்தம் வரும்?”

“சரி ஆலிமுக்கு படித்தவர் எப்படி மோதினார் பணிக்கு வருவார்?”

”கூடுதல் சம்பளமும் சமமான அதிகாரமும் கிடைத்தால் ஆலிம்கள் மோதினார் பணிக்குக் கட்டாயம் வருவார்கள். ஒரு மாறுதல் புதிதாக ஆரம்பிக்கும் போதுதான் சிறுசிறு தயக்கமயக்க குழப்பங்கள் வரும். மாறுதல் நின்று நிலைபெற்றுவிட்டால் சூழ்நிலை சுமுகமாகும்!”

“போனஸ் கேக்கிறார்!”

“இமாமுக்கு பத்தாயிரம், துணை இமாமுக்கு அய்யாயிரம், மோதினாருக்கு 7500ரூபாய், ரம்ஜானுக்கு போனஸ் கொடுப்போம்..



“ரம்ஜான் நேரத்தில் மஹல்லாமக்கள் இமாம் மோதினாருக்கு விரும்பி சிறுசிறுதொகைகள் கொடுப்பார்களே...”

“விரும்பிக் கொடுக்குப்படும் அன்பளிப்புகளைக் கணக்கில் சேர்க்கக்கூடாது!”

“தமிழ்நாட்டிலுள்ள அனைத்து இமாம்களையும் ஒன்று சேர்த்துச் சங்கம் ஆரம்பிச்சிருவாரோ நம்ம இமாம்?”

சிரித்தார் முத்தவல்லி.

“என்னென்ன மாதிரி எல்லாம் நம்ம இமாமைச் சந்தேகப்படுறீங்க? மார்க்கத்துக்கு விரோதம் இல்லாம சங்கம் ஆரம்பிக்க முடியும்னா இமாம் சங்கம் ஆரம்பிச்சிட்டு போகட்டுமே...”

“இமாமின் கோரிக்கைகளில் எங்களுக்கு முழு உடன்பாடு இல்லை. உங்க கருத்துகளைக் கண்ணியபடுத்த இமாமின் கோரிக்கைகளைக் காகித அளவில் அங்கீகரிக்கிறோம்…”

சிரித்தார் முத்தவல்லி.

இமாமுக்கு தூதஞ்சல் வந்திருந்தது.

ஹுசைன் கனி பாகவி கவரை பிரித்தார் அதில்-

பள்ளிவாசல் இமாம் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் கடிதத்தை படித்தேன். உங்கள் கருத்துகள் எனக்கு முழுக்க உடன்பாடே. பள்ளிவாசலின் பொருளாதாரச் சூழ்நிலையை அனுசரித்து உங்கள் கோரிக்கைகளை வரிசையாக நிறைவேற்றுவோம். முதல் அம்சமாக வரும் மாதத்திலிருந்து நம் பள்ளிக்குத் துணைஇமாம் நியமிக்கப்படுவார். உங்களுக்கான வாரவிடுமுறை துணைஇமாம் பணி சேர்ந்ததிலிருந்து ஆரம்பிக்கிறது.

எல்லாவற்றுக்கும் இறைவன் போதுமானவன்.

என்றென்றும் இறைப்பணியில்

அப்ரார் ஷெரீப்
(முத்தவல்லி)


அடுத்தநாள் இமாமும் முத்தவல்லியும் நேருக்கு நேர் பார்த்து அழகிய முகமன் கூறிக்கொண்டனர்.

“அழுத குழந்தைதான் பால் குடிக்கும் இமாம்... பாலை அஜீரணமாகாமல் துப்பி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் இமாம்!” என்றபடி கிளம்பினார் முத்தவல்லி.

இஸ்லாம் கோகினூர் வைரமாய் பிரகாசித்தது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p3.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License