இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

31. நாற்பது நாள் நற்பலன்


வெளி வாசலைப் பார்த்தவாறே ஈஷி சேரில் படுத்திருந்தாள் ஜமீலா. வயது 65. உயரம் 150 செமீ. முழுக்க நரைத்த தலைக் கேசம். நிலா பூசிய கண்கள். மின்னும் மூக்கு. சதா திக்ர் எடுக்கும் உதடுகள். கழுத்தில் தசை மடிப்புகள். க்ளோஸ்நெக் முழுக்கை ஜாக்கட். இடது கையில் ஆயத்துல் குர்ஸி எழுதப்பட்ட வளையல்கள்.

படுத்திருக்கும் பாட்டியை உளவு பார்த்தவாறே குறுக்கே நெடுக்கே நடந்தாள் அஸ்பியா. வயது 10. பள்ளிக்குச் சென்று வருவது போல மதரஸாவுக்கும் தினமும் சென்று வருவாள். எதனை எடுத்தாலும் நூறு கேள்விகள் ஏன், எதற்கு, எப்படி எனக் கேட்டு விடுவாள். அவளுக்குப் பதில் சொல்லப் பயந்தே வீட்டின் மூத்தத் தலைகள் அவளைக் கண்டால் பதுங்கிக் கொள்ளும்.

வெளி வாசலில் காலடி ஆர்வம் கேட்டது. விபூதி, குங்குமம், சந்தனம், மரிக்கொழுந்து கலந்த வாசனை எழுந்தது.

“ஜெய் ஜக்கம்மா! எல்லம்மா! போலேரம்மா! பொம்மம்மா!” கே பி சுந்தராம்பாள் குரல் கேட்டது.

“யாரு?”

“பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து வரேன்…. நான் ஒரு குறி சொல்றவ… என் பெயர் உலகநாயகி!”

“அச்சச்சோ… இது பாய் வீடு… வேற எங்கயாவது போய் குறி சொல்லும்மா!”

“நீ யாராயிருந்தா என்னம்மா? நான் சொல்ற குறி உலக மக்கள் அனைவருக்கும் பலிக்கும். காலாங்கி நாதர், சட்டைமுனி, ராமதேவர், கோரக்கர், பாம்பாட்டிச் சித்தர், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அனைவரின் ஆசியும் என் குறி சொல்லுதலுக்கு உண்டு. என் ஜக்கம்மா தொட்டிய நாயக்கரின் குலதெய்வம்!”

“என்னென்னமோ சொல்றியே… நீ வேறிடம் பாரம்மா!”

“என்னம்மா தேவி ஜக்கம்மா… உலகம் தலைகீழாத் தொங்குது நியாயமா? பசுமாடும் ஆத்தாவ அம்மான்னு சொல்லுது. பச்சத் தமிழனோ மம்மின்னு சொல்ரான்…”

“எம்மா பாட்டெல்லாம் பாடாதே!”

“சாலிகுளத்துப் பக்கத்திலே… சார்ந்திடும் செம்மண் மேட்டிலே… காடை வேட்டை நாள் ஆடுகையிலே கண்ட அதிசயம் சொல்றேன்…. முன்முயல் சென்றிடப் பின்னே… நாய்… முடுக்க மேட்டுக்கு போனவுடன் முன்னாடி நின்ற முயலுதான்.. பின்னோடும் நாயை விரட்டியதே!”

ஜமீலா சிரமப்பட்டு எழுந்தாள்.

வாசலுக்கு வந்தாள்.


பழுத்த பழமாய் நின்றிருந்தாள் உலகநாயகி. கோடாலிக் கொண்டை… நெற்றியில் விபூதியும் வட்டக் குங்குமமும். மூக்கின் இரு பக்கமும் மூக்குத்திகள். சதா வெற்றிலை போட்டு சிவந்த வாய். இடது தோளில் துணி தொட்டில். வலது கையில் கோல். வயது 80 இருக்கும். கனத்த பூசணிதிரேகம். அம்மன் கண்கள்.

“சொன்னா கேக்க மாட்டியா? போயேன்ம்மா!”

“பாய்களுக்கு வேற மாதிரியும் எங்களுக்கு வேற மாதிரியுமா கைரேகை அமைஞ்சிருக்கும். எல்லாத்துக்கும் ஒண்ணுதானே? வா… வந்து உக்காரு… ஒரு நா குறி கேட்டா உங்க அல்லா சாமி ஸ்கேல் எடுத்து அடிக்குமா என்ன?”

“அம்மா… நாங்க குறி ஜோசியமெல்லாம் பார்க்க மாட்டோம்மா…”

“உன் குடும்பத்துல இருக்ற எல்லாப் பிரச்சனையையும் புட்டுபுட்டு வைப்பேன்... அதோட எதிர்காலத்ல நீ செய்ய வேண்டிய பரிகாரங்களையும் சொல்வேன்… மொத்தத்ல உன் குடும்பத்துக்கு நல்ல காலம் பொறக்குது!”

சோதிடர்கள் சொல்வது சரியாகி விடுகிறதே!
ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் சிலர் சோதிடர்களைப் பற்றிக் கேட்டனர்.

நபி (ஸல்)அவர்கள், ‘அவர்கள் (பொருட்படுத்தத் தக்க) ஒரு பொருள் அல்லர்’ என்றார்கள்.

மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! இந்தச் சோதிடர்கள் (சில வேளைகளில்) ஒன்றை அறிவிக்கிறார்கள்; அது உண்மையாகி விடுகிறதே!’ என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘அந்த உண்மையான சொல் (வானவர்களிடமிருந்து) ஜின் எடுத்துக் கொண்டதாகும்.

அது தன் (சோதிட) நண்பனின் காதில் கோழி கொக்கரிப்பதைப் போன்று கொக்கரிக்க, அவன் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்து விடுகிறான்’ என்று பதிலளித்தார்கள்.
- ஸஹீஹ்புகாரி: 7561

ஜமீலாவுக்கு லேசாக ஆசை துளிர்த்தது.

“வாழ்க்கைல மொதத் தடவையும் கடைசித் தடவையுமா குறி பார்ப்போமே… எத்தை தின்னா பித்தம் தெளியும்ன்ற நமக்கு இவ சொல்ற குறி மருந்தாகட்டும்….”

“நீ குறி சொல்றதில கெட்டிக்காரின்னு நானெப்படி ருஜுபடுத்றது?”

“என்ன அப்படி கேட்டுட்ட பாயம்மா… நான் குறி சொல்லாத இடமில்லை…”

“குறி சொல்றதுக்கு எவ்வளவு கேட்ப?”

“நான் என்ன ஆனையக்குடு பூனையக்குடுன்னா கேக்கப்போரேன்… பதினோரு ரூபா வெற்றிலை பாக்குடன் தட்சணை குடு.. அது போதும்…”

“நான் உன்கிட்ட குறி பார்த்ததை இந்த ஊர் மக்கள் யார் கிட்டயும் மூச்சு விடாதே!”

“சரி!”

“எவ்வளவு நேரமாகும்?”

“அரை மணி நேரமாகும்!”

“இப்டி ஒளிவு மறைவா உக்காருவோம்!” இருவரும் எதிர் எதிரே அமர்ந்தனர்.

“இருகைகளையும் என் முன்னே நீட்டு பாயம்மா!”

நீட்டினாள் ஜமீலா.

கைரேகைகளைத் தனது விரலாலும் கோலாலும் வருடினாள் உலகநாயகி. “நீ படுலோல் பட்ட ஜென்மம். உனக்கு ஐந்து பிள்ளைகள். இரண்டு ஆண். மூன்று பெண். கணவர் திருமணமான பத்து வருடங்களில் இறந்துவிட்டார். உன் மூத்த மகள் விவாகரத்து பெற்று குழந்தைகளுடன் உன் வீட்டில் இருக்கிறாள். உன் மூத்த மகன் கொரோனாவில் இருந்து வேலை இல்லாமல் இருக்கிறான். உன் இரண்டாவது மகன் ஆக்ஸிடெண்ட்ல காலை உடைச்சிட்டு வீட்ல வந்து கிடக்கான். இரண்டாவது மகளுக்கு மார்பகப் புற்றுநோய். சிகிச்சையில் இருக்கிறாள். உன் மூன்றாவது மகள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒற்றைக் குரங்காக் காலத்தை ஓட்ரா…”


“நேரா பாத்தமாதிரி சொல்ற!”

“உனக்கு ஹை சுகர்… 400க்கு மேல இருக்குது!”

பெருமூச்சு விட்டாள் ஜமீலா. “ஆமா!”

“உனக்கு முன்னிருக்கும் கேள்விகள் நான்கு. விவாகரத்து ஆன என் மகள் மறுமணம் செஞ்சிப்பாளா? என் மகனுக்கு மீண்டும் வேலை கிடைக்குமா? உடைந்த கால் குணமாகி என் மகன் முன்னைப் போல நடமாடுவானா? திருமண ஆசை வந்து என் மூன்றாவது மகள் திருமணம் செய்து கொள்வாளா? சரியா?”

“ஆமாம்!”

“பரிகாரம் சொல்கிறேன்… ஜெய் ஜக்கம்மா!”

“பரிகாரம் காஸ்ட்லியா இல்லாமப் பாத்துக்க!”

“ரொம்ப ஈஷியான பரிகாரங்கள்தான் பாயம்மா…! ”

தனது துணிப்பையில் இருந்து குங்குமம் தடவிய எலுமிச்சைப் பழத்தை எடுத்தாள்.

“இதை தினமும் தலைமாட்ல வச்சுப் படு. வாராவாரம் பதினோரு ஏழைகளுக்கு அன்னதானம் செய். இரண்டு சுமங்கலிப் பெண்களுக்கு பட்டுப் புடவைகள் பரிசளி. உங்க சாமியை தொழுது முடிச்சவுடனே வீட்டு அங்கத்தினர்கள் அனைவர் மீதும் ஓதி ஊது. ஓதிய தண்ணீரைக் கொடுக்கக் கொடு. ஒரு முறை பொட்டால்புதூர் தர்காவுக்கு போய் கிடா வெட்டு..”

“சரி!”

“என்ன பாக்ற? நான் எப்ப பரிகாரம் சொன்னாலும் பரிகாரம் சொல்லப்படுற நபரின் மதத்தை ஒட்டித்தான் சொல்லுவேன்! ஜெய் ஜக்கம்மா!”

ஒரு சிவப்புக் கயிற்றை எடுத்தாள் உலகநாயகி.

“இதை உன் இடது காலில் கட்டு!”

வாங்கிக் கொண்டாள் ஜமீலா. பதுக்கி வைத்திருந்த பர்ஸிலிருந்து 11 ரூபாய் எடுத்து நீட்டினாள்.

“இன்னும் ஆறே மாதம்… உன் வீட்டுப் பிரச்சனைகள் எல்லாம் பறந்தோடி விடும்!”

“மகிழ்ச்சியும் நன்றியும்!”

“நான் சொன்னபடி நடந்தா எனக்கு என்ன தருவ?”

“என்ன வேணும்?”

“ரெண்டு சின்னாளபட்டி புடவையும் 101 ரூபாய் காசும் கொடு!”

“சரி!”

“ஜெய் ஜக்கம்மா!” என்றபடி உலகநாயகி கிளம்பிப் போனாள்.

உள்ளே போன ஜமீலாவை இடைமறித்தாள் அஸ்பியா.

“என்ன செஞ்சிட்டு வர்ற அம்மம்மா!”

“ஒண்ணுமில்லையே…”


“குறி கேட்டுட்டு வருகிறாய்… இஸ்லாமில் குறி மற்றும் ஜோசியம் கேட்பது தடை செய்யப்பட்டுள்ளது என்பது உனக்குத் தெரியுமா, தெரியாதா? ஒரு முஸ்லிம் குறி அல்லது ஜோசியம் பார்த்தால் அவரது நாற்பது நாள் ஒப்புக்கொள்ளப்பட்ட நற்பலன்கள் மற்றும் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை என முஸ்லிம்: 4488 கூறுகிறது தெரியுமா?”

“நான் விரும்பிப் போகவில்லை, குறிகாரி வற்புறுத்தி கூப்பிட்டாள்!”

“அவரவர் மத நம்பிக்கை அவர்களுக்கு. ஒரு இந்துப் பாட்டி குறி கேட்டால் தப்பில்லை. ஒரு இஸ்லாமியப் பாட்டி குறி கேட்கலாமா?”

“நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளை யாராவது சொல்ல மாட்டார்களா என ஏங்கினேன். உலகின் விலையர்ந்த மருந்து நம்பிக்கையளிக்கும் வார்த்தைகள்தான். நான் செய்த இந்தத் தவற்றை அல்லாஹ் மன்னிப்பான் என நம்புகிறேன். நாற்பது நாள் உபரி தொழுகைகளையும் உபரி அமல்களையும் செய்து இறைவனிடம் மன்னிப்பு இறைஞ்சுவேன்….”

“குறிகாரி கொடுத்த எலுமிச்சம் பழத்தையும் சிவப்புக் கயிற்றையும் என்ன செய்யப் போகிறாய்?”

“கொல்லையில் புதைப்பேன்… பதினோரு வாரங்களுக்கு பதினோரு ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் வழங்குவேன்…”

“மகிழ்ச்சி!”

தனது அறைக்கு நடந்தாள் அஸ்பியா.

“யா அல்லாஹ்! மனிதர்கள் உணர்ச்சி சார்ந்த நம்பிக்கைகளைத் தேடி ஓடாத அளவுக்கு அவர்களின் பிரச்சனைகளை இலேசாக்கு. என் அம்மம்மாவின் முதுமைக் காலத்தை இனிமையானதாக மாற்று… எங்க குடும்பப் பிரச்சினைகள் தீர்ந்தால் உரிய இடைவெளியை விட்டு உபரி முப்பது நோன்புகள் வைக்கிறேன்!”

அஸ்பியாவின் மீது அருள் மழை பொழிந்தான் இறைவன்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p31.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License