இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

5. ஸாமியா


கிழக்குப் பள்ளிவாசல்.

முத்தவல்லி அறை.

அறையில் முத்தவல்லி பஸ்ஹான் நவாஸ் அமர்ந்திருந்தார். அவர் நகரின் முக்கிய வணிகர். மார்க்க விஷயங்களைத் துளி பிசகாமல் கடைப்பிடிக்கக் கூடியவர்.

இமாம் நூருல் அமீன் காதிரீ அறைக்குள் பிரவேசித்தார். “அஸ்ஸலாமு அலைக்கும் முத்தவல்லி சாப்!”

இமாமுக்கு வயது 42. உயரம் 170செமீ. ஒலிபெருக்கி தேவைப்படாத கணீர் குரல். புன்னகை முகம். ட்ரிம் செய்யப்பட்ட தாடி. சுருமா ஈஷிய கண்கள். அழகிய பல் வரிசை. தினமும் ஒரு தடவையாவது திருக்குர்ஆனை ஓதி விடுவார்.

‘வஅலைக்கும் ஸலாம் இமாம்!”

எதிரில் வந்து நின்றார் இமாம்.

“உக்காருங்க.. உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்…”

அமர்ந்தார்.

“இன்று ஷாபான் மாதம் 25ஆம் நாள்...”

“ஆமாம்!”

“பள்ளிவாசலின் உள்ளும் புறமும் சுத்தம் செய்தாகிவிட்டது இல்லையா?”

“சுத்தம் செய்து விட்டோம்!”

“பள்ளி இரவில் ஜகஜகவென ஜொலிக்க சீரியல் பல்ப் சரங்கள் தொங்க விடப் பட்டுள்ளன இல்லையா?”

“ஆமாம்!”

“நோன்புக்கஞ்சி காய்ச்ச தகுதியான ஆட்களை நியமித்தாகி விட்டது இல்லையா?”

“ஆமாம்!”


“எத்தனை நோன்புக்கஞ்சிக் கார்டுகள் விநியோகித்துள்ளோம்!”

“எண்ணூறு!”

“எத்தனை பேர் ஒருநாளைய நோன்புக்கஞ்சிச் செலவான 12000 ரூபாயை ஹதியா பண்ணியுள்ளனர்?”

“இதுவரை பதினெட்டு பேர்!”

“நோன்புக் கஞ்சி காய்ச்ச தேவையான அரிசி, வெங்காயம், தக்காளி, வெள்ளைப்பூடு எல்லாமே வாங்கி விட்டோம் அல்லவா?”

“வாங்கிவிட்டோம்!”

முத்தவல்லி சிரித்தார்.

“மொத்தத்தில் ரமலான் மாதத்தை வரவேற்கத் தயாராகி விட்டோம் இல்லையா, இமாம்?”

“ஆமாம் முத்தவல்லி!”

“மனதளவிலும் உடலளவிலும் ரமலானுக்காக மீதி 11 மாதங்கள் ஏங்கி நிற்கிறோம்!”

“உண்மை!”

“தினமும் இரவு தொழுகையாளிகளை திராவீஹ் தொழ வைக்க ஆயத்தமாக இருக்கிறீர்களா?”

“இருக்கிறேன்!’

“எட்டு ரக்அத்தா இருபது ரக்அத்தா என்கிற சர்ச்சைக்குள் போக விரும்பவில்லை. இருபது ரக்அத்கள் பித்ரு தொழுகை மூன்று ரக்அத்கள். தினமும் நீங்கள் பயான் பண்ண வேண்டி வரும். பயானுக்கான தகவல் குறிப்புகளைச் சேகரித்து விட்டீர்களா?”

“விட்டேன்!”

“மாதிரிக்கு ஒரு தலைப்பு சொல்லுங்கள்!’

“முதல்நாள் ‘நோன்பைத் துவக்குவோம்’, இரண்வது நாள் ‘இறை வல்லமை’, மூன்றாவது நாள் ’முன்மாதிரிகள்’, நாலாவது நாள் ‘வாரிசுரிமை சட்டங்கள்’, ஐந்தாவது நாள் ‘உணர்வுகள்’, ஆறாவது நாள் ‘இருண்ட நாட்கள்’, ஏழாவது நாள் ‘அழியும் உலகம்’...”

“சரிசரி.. நான் ஏன் உங்களை வரச்சொன்னேன் தெரியுமா?”

“தெரியாது!”

“திராவீஹ் தொழுகையைத் தொழ வைக்கப் போகிறீர்கள். உங்களுக்கு உதவியாக ஒரு ஸாமியாவை நியமிக்க உத்தேசித்துள்ளேன்!”


“கச்சேரிகளில் அல்லது இந்துத் திருமணங்களில் ஒரு பிரதான நாகஸ்வரக் கலைஞர் இருப்பார். அவர் ஊதுவார், அவர் சில சமயங்களில் ஊதுவதை நிறுத்தி விட்டு மூச்சு வாங்குவார். அவர் விட்ட இடத்திலிருந்து துணை நாகஸ்வர கலைஞர் ஊதுவார். நிறைய சமயங்களில் முதலாமவர் ஊதுவதை விட்டதும் தெரியாது. இரண்டாமவர் ஊதுவதை தொடர்ந்ததும் தெரியாது. அப்படி ஒரு ஒத்திசைப்பு இருக்கும். துணை நாகஸ்வர கலைஞர்தான் ஸாமியா இல்லையா முத்தவல்லி?”

“ஏறக்குறைய உங்கள் உதாரணம் சரி. நிறைய இந்துக்கள் கல்யாணங்களுக்குப் போய் நாதஸ்வரக் கச்சேரி கேட்டிருப்பீங்களோ இமாம்?”

“சின்னவயசுல தில்லானா மோகனாம்பாள் பார்த்த ஞாபகம்!”

“சரி விஷயத்துக்கு வருவோம். நிறைய பள்ளிவாசல்கள்ல திராவீஹ் தொழுகைக்கு ஸாமியா நியமிக்கிறதில்லை. நான்தான் செய்வன திருந்தச்செய் கேட்டகிரியாச்சே... இந்த வருஷம் நம்ம பள்ளில ஸாமியா இருப்பாரு!”

“என்னைப் பொறுத்தவரை ஸாமியா தேவையில்லை, என்றே நினைக்கிறேன்!’‘

“இமாமும் மனுஷன்தானே! இமாமும் தொழ வைக்கும் போது, திருமறை வசனங்களை சில நேரம் மறந்து விடக்கூடும். அப்போது பின்னாடி இருந்து ஸாமியா எடுத்துக் கொடுக்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான்.”

“சரி உங்கள் இஷ்டம் முத்தவல்லி!”

“உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. நான் நியமிக்கப் போகும் ஸாமியாவில் இரு சாய்ஸ்களை வைத்துள்ளேன்!”

“புரியவில்லை!”

“உங்களிடம் இரு ஸாமியாக்களின் பெயர்களைக் கூறப் போகிறேன் இருவரில் ஒருவரை நீங்களேத் தேர்நதெடுக்கலாம்!”

“சொல்லுங்க!”

“முதலாமவரின் பெயர் ஜுபைர் அஹமது பாகவி வயது 72. மார்க்க அறிஞர் ஆயிரக்கணக்கான ஆலிம்களுக்கு ஆன்மிகக்குரு. உங்களுக்கு மாதச் சம்பளம் இருபதாயிரம் தருகிறோம் இல்லையா? அவருக்கு ஸாமியா பணிக்காக 25000 ரூபாய் தர உத்தேசித்துள்ளோம். அவர் ஸாமியாவாக வருவது நம் பள்ளிக்குப் பெருமை…”

“மாஷா அல்லாஹ்!”

“இரண்டாமவரின் பெயர் செய்யது மஸ்வூது ஜமாலி. அரபியுடன் முதுகலை ஆங்கிலமும், முதுகலை தமிழும் படித்தவர் வயது 26. திருக்குர் ஆனை பத்தாயிரம் தடவை ஓதியவர். சூபியிஸத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவரை ஸாமியாவாக நியமித்தால் 8000 ரூபாய் ஹதியாவாக வழங்கத் தீர்மானித்துள்ளோம்.”

நூருல் அமீன் காதிரீ யோசித்தார்.

எத்தனையோப் பள்ளிகளில் இமாம்களுக்கும் ஸாமியாக்களுக்கும் ஈகோ போர் நடந்து இமாம்கள் தோற்றுப்போனதாக கேள்விப்பட்டுள்ளார் நூருல் அமீன்.

பல ஸாமியாக்கள் இமாம்களின் அரபி உச்சரிப்பைக் கேலி செய்து சிரித்தது உண்டு.

ஸாமியாக்கள் இல்லாத போது சரளமாய் ஓதும் இமாம்கள் ஸாமியாக்கள் இருப்பில் திக்கித்திணறுவது கண்கூடு.

பத்து ரக்அத் தொழுகைக்கு நாம் தொழ வைப்போம் வருபவர் ஸாமியாவாக இருக்கட்டும். மீதி பத்து ரக்அத் தொழுகையை ஸாமியா தொழ வைக்கட்டும். நாம் ஸாமியா வேலை பார்ப்பம்.

“என்ன யோசிக்கிறீர்கள் இமாம்? சுயகௌரவம் தடுக்கிறதா?” முறுவலித்தார் இமாம்.

“ஈகோவை தூக்கி எறிந்துவிட்டுதான் இமாம் ஆனேன். நான் 18 வருடங்களாக இமாம் பணி செய்கிறேன் இதுவரை ஸாமியாக்கள் யாரும் என் பொருட்டு நியமிக்கப்பட்டதில்லை. அந்த அனுபவத்தையும் ஏன் தவறவிடவேண்டும்? நீங்கள் தாராளமாக ஸாமியாவை நியமிக்கலாம். நீங்கள் இரண்டாவதாகச் சொன்ன செய்யது மஸ்வூது ஜமாலி என்கிற இளைஞரை ஸாமியாவாக நியமியுங்கள்!”

“மகிழ்ச்சி அவரின் கைபேசி எண் என்னிடம் உள்ளது. தருகிறேன். பேசுகிறீர்களா?”

“இல்லை.. நேரில் பார்த்துப் பேசிக் கொள்கிறேன்...”

ரமலான் ஆரம்பித்தது.

இமாமும் ஸாமியாவும் அழகிய முகமன்கள் கூறிச் சந்தித்துக் கொண்டனர். செய்யது மஸ்வூது ஜமாலி யூசுப் நபி போல அழகாய் இருந்தார். ரோஜா இதழ் கைகளால் கை குலுக்கினார்.

திராவீஹ் தொழுகைகள் தினம் தொடங்கின.


ஸாமியா மிக அமைதியாக இமாமை தொழுகையில் பின் தொடர்ந்தார். குறுக்கீடுகள் இல்லை சிறுசிறு பணி விடைகள் செய்தார்.

இறுதி திராவீஹ் தொழுகையை நடத்தி முடித்த இமாம் நூருல் அமீன், கூட்டத்தில் ஒரு முகத்தைப் பார்த்து விட்டார். அந்த முகத்துக்கு உரியவர் ஜுபைர் அஹமது பாகவி.

இருவரும் முஸாபஹா செய்து கொண்டனர். இருவரிடம் வந்து நின்றார் ஸாமியா.

“நீங்கள் எப்படி இங்கே பாகவி!”

“உன் அரபி உச்சரிப்பை நெருக்கத்தில் நின்று கேட்டு மகிழவே ஸாமியாவாக விரும்பினேன். நீ இளையவரைத் தேர்ந்தெடுத்து விட்டாய். இருந்தாலும் என்ன? தினமும் உனக்குத் தெரியாமல் வந்து தொழுகையாளிகளுடன் தொழுகையாளியாய் நின்று உன் ஓதுதலை காதுகுளிரக் கேட்டுவிட்டேன்…”

ஸாமியா தனக்குக் கொடுக்கப்பட்ட ஹதியாவை இமாமிடம் கையளித்து “உங்களைக் குறை கூற சில மஹல்லாவாசிகள் என்னை நிர்பந்தித்தார்கள். குறை கூற வாய்ப்பே இல்லை. அடுத்த வருட ரமலான் மாத திராவீஹ் தொழுகைக்கு இப்போதே ஏங்குகிறேன்!” என்றார் செய்யது மஸ்வூது ஜமாலி.

“ஜஸாக்கல்லாஹு கைரன்!” என்றார் இமாம் நூருல் அமீன்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p5.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License