இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

6.ஜஸாக்கல்லாஹ் கைரன்


தஞ்சாவூர் சந்திப்பு.

நடைமேடை ஒன்றில் நானும் எழுத்தாளர் தஞ்சாவூர் ஹரணியும் காரைக்குடி - எர்ணாகுளம் விரைவு வண்டிக்காகக் காத்திருந்தோம். ஹரணியின் இயற்பெயர் அன்பழகன். ஹரணி மிகச்சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞர். அவர் புதிதாக ‘என்பா’ கவிதைகளை கண்டுபிடித்து தமிழ் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

நான் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் சுகாதார அதிகாரியாகப் பணிபுரிந்த போது ஹரணி தொலைதூரக் கல்வி இயக்ககத் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தார். எப்போதுமே எனக்கும் தமிழ்துறைக்கும் ஏழாம் பொருத்தம் தான். என்னுடைய கதைகளில் ஆங்கிலக் கலப்பும் சமஸ்கிருதக் கலப்பும் அதிகம் எனக் குற்றம் சாட்டுவர். மர்மக்கதைகள் துப்பறியும் கதைகள் எழுதும் எழுத்தாளர்களைக் கண்டால் அவர்களுக்குச் சிறப்பு ஒவ்வாமை. விதிவிலக்காக ஹரணி என் எழுத்தின் மீது அபிமானம் கொண்டிருந்தார். எங்கள் பல்கலைகழகக் குடியிருப்புக்கும் ஓரிரு முறை வந்து போயிருக்கிறார்.

நான்கு வருடங்களுக்கு முன் நான் பல்கலைப் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். 2018 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரை சிதம்பரத்தில் இருந்த நாங்கள் 2020 ஆம் ஆண்டு கடைசியில் கோவைக்குக் குடிபெயர்ந்து மகனின் குடும்பத்துடன் ஐக்கியம் ஆனோம்.

ஹரணியும் கொரோனா காலத்துப் பிரச்சனைகளைத் தாங்க முடியாது விருப்ப ஓய்வு பெற்றுத் தஞ்சைக்குப் போய் விட்டார்.

அதன்பின் இருவரும் முகநூல் மூலம் அளவளாவிக் கொண்டோம். ஓய்வு பெற்ற பின் எங்கள் இருவரின் எழுத்தும் வீரியமானது.

ஹரணி என்னைத் தஞ்சைக்குக் கூப்பிட்டிருந்தார், போனேன். இருவரும் தஞ்சைப் பெரிய கோயில் சுற்றிப் பார்த்தோம். சிறப்பான விருந்தோம்பல். தவிர, நானும் அவரும் நிறைய இலக்கியம் பேசினோம்.

“ஹரணி! உங்களுக்கும் எனக்கும் காரைக்கால் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் பெர்த் ரிசர்வேஷன் பண்ணிட்டேன். வாங்க எங்க கோவை வீட்டுக்கு. என் மனைவி மருமகள் மகன் பேரனைச் சந்திக்கலாம்…”


“சரி... வருகிறேன்.. ஒரே நாள்தான். இரவு 12.30 மணிக்குக் கிளம்பும் செம்மொழி எக்ஸ்பிரஸில் என்னை ஏற்றிவிடுங்கள்!”

ரயில் ஒரு மணிநேரத் தாமதமாய் வந்தது. எஸ் 4 பெட்டியில் ஏறிக்கொண்டோம். இருவருக்கும் லோயர் பெர்த்தான்.

ரயிலில் இருவரும் தூங்கவில்லை பேசிக்கொண்டே வந்தோம்.

“ஆர்னிகா! அடுத்தமாதம் என் மகன் குகனுக்குத் திருமணம் குடும்பத்தோடு வந்து வாழ்த்துங்கள்!”

“ஜமாய்ச்சிரலாம்...”

ரயில் கோவைக்கு நள்ளிரவு 2.15 மணிக்கு வந்து நின்றது. இருவரும் இறங்கினோம். ரயில் நிலையத்தின் முன் பகுதிக்கு வந்தோம்.

பேர் ஆட்டோவுக்கு போன் பண்ணினேன். யாரும் எடுக்கவில்லை.

ஆட்டோக்காரர்கள் சூழ்ந்தனர்.

“எங்க சார் போகனும்?”

“உக்கடம்... ஜிஎம் நகருக்கு அருகில் இருககும் மனாஸ் கார்டனுக்கு!”

“அய்நூறு ரூபா குடு சார்!”

“எப்பவும் எண்பது ரூபாதான்ப்பா குடுப்பேன்!’

“எண்பது ரூபாயையும் மிச்சப்படுத்தனும்னா நடந்தே போ சார்!”

பணி ஓய்வு பெற்ற பின் நான் மகாசிக்கனக்காரன் ஆகிவிட்டேன். சுளையாய் 500 ரூபாய் கொடுக்க மனம் ஒப்பவில்லை.

பல ஆட்டோக்காரரர்களிடம் பேரம் பேசினேன்.

450 ரூபாய் வரை இறங்கி வந்தார்கள்.

அப்போது திடீரென்று ஒரு தாடிக்கார முதியவர் என்னிடம் ஓடி வந்தார். “அஸ்ஸலாமு அலைக்கும் பாய்!”

“வஅலைக்கும் ஸலாம்!”

“என் ஆட்டோல ஏறுங்க!”

“வாடகை?”

“வாடகையா முக்கியம்? நீங்க வாங்க பாய்...”

“இறக்கிவிடுற எடத்ல வாடகை இவ்வளவு அவ்வளவு என்று சண்டை போடக் கூடாது!”

சிரித்தார் தாடிக்காரர்.

“எனக்கு உங்களை நல்லாத் தெரியும். நீங்க எழுத்தாளர் ஆர்னிகா நாசர்தானே? உங்க திருமறை இஸ்லாமிய நீதிக்கதைகளைப் படிச்சிருக்கேன் பாய். அற்புதமான கதைகள். தவிர, என் பேரனுக்கு உங்க மகனின் நிலா டென்டல் கிளினிக்கில் தான் சொத்தைப்பல் அகற்றினோம். உங்களுக்கு வாடகை குடுத்தே ஆகனும்னு தோணுச்சுன்னா எண்பது ரூபா கொடுங்க!”


இருவரும் ஆட்டோவில் ஏறி அமர்ந்தோம். ஆட்டோ சீறிப் பாய்ந்தது.

நான் எழுதின கதைகளைப் பற்றி பேசிக்கொண்டே வந்தார் ஆட்டோக்காரர். “இந்து- முஸ்லிம் மத நல்லிணக்கத்துக்காக நீங்க இஸ்லாமிய நீதிக்கதைகள் எழுதி வரீங்க. உங்க கதைகள் காலத்தின் கட்டாயம். கோவை மக்களுக்கு மதநல்லிணக்கம் மிக மிக அவசியம்!”

வீட்டுவாசலில் ஆட்டோவை நிறுத்தினார்.

ஒரு நூறுருபாய் தாளை எடுத்து நீட்டினேன்.

“வேண்டாம் பாய் ஒரு அருமையான எழுத்தாளருக்கு நான் காட்டும் அன்பு, வாடகை வேண்டாம்!”

பலமுறை கொடுக்க முயற்சித்தும் வேண்டவே வேண்டாம் என முரண்டினார்.

“உங்க பேரு என்ன பாய்?”

“உமர் பாரூக்!”

அவரின் கைபேசி எண்ணை வாங்கிக் கொண்டேன். “ஜஸாக்கல்லாஹ் ஹைரன்!” என்றேன்.

பதிலுக்கு அவர் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு “ஆமீன்! ஆமீன்!” என்றார்.

ஆட்டோ கிளம்பிச் சென்றது.

ஹரணி என்னிடம் திரும்பினார். “ஆர்னிகா! நன்றி எனச் சொல்வதற்குப் பதிலாக வேறொரு வார்த்தையை ஆட்டோகாரரிடம் கூறுனீர்கள். அதென்ன வார்த்தை? அதற்கென்ன அர்த்தம்!”

“ஹரணி! ஒருவர் ஒரு உதவி செய்தால் அவருக்கு நன்றி சொல்வது உயர் கலாச்சார வெளிப்பாடு. ஒவ்வொரு மொழியிலும் ‘நன்றி’ வார்த்தைக்கு சமமான வார்த்தைகள் உள்ளன. பிரஞ்சு மக்கள் நன்றியை ‘மெர்ஸி’ என்கிற வார்த்தையால் தெரிவிப்பர். ஜப்பான்காரர்கள் ‘அரிகாட்டோ’ என்பர். ஸ்பானிஷ் மக்கள் ‘கிரேஸியஸ் முச்சாஸ்’ என்பர். சீனர்கள் ‘ஜிஜி‘ என்பர். ஆப்பிரிக்கர்கள் ‘டான்கி’ என்பர். அஸ்ஸாமியர்கள் ‘டொய்னோபாத்’ எனவும், பிரேசில் மக்கள் ‘ஒப்ரிகாடோ’ எனவும், பெர்ஸியன் ‘ஜெய்லி மாம்னுனம்’ எனவும், குஜரத்திகள் ‘தன்யாவாத்’ எனவும், ஹிப்ருமக்கள் ‘தோடா’ எனவும், வடஇந்திய மக்கள் ‘சுக்ரியா’ எனவும் கூறுவர்.

ஹரணி உற்சாகமாய் காதுற்றார்.

“ரஷ்யர்கள் ‘ஸ்பாசிபா’ எனவும், சமஸ்கிருதம் பேசுவோர் ‘அனு கிரிட்டோஸ்மி’ எனவும், இத்தாலியர்கள் ‘கிராஸி’ எனவும், உஸ்பெக் மக்கள் ‘ரஹ்மத்’ எனவும், இந்தோனேசியர்கள் ‘தெரிமா கசி’ எனவும், சோமாலியர்கள் ‘மஹட்சனிட்’ எனவும், தாய்லாந்தியர்கள் ‘கேப்கூன் கிராப்’ எனவும் கூறுவர். நார்வேயில் ‘தக்’ என்பர்!”

“பட்டியல் அவ்வளவுதானே?”

“பொதுவாக மக்கள் நன்றி என்கிற வார்த்தையை மேலோட்டமாக கேஷுவலாக திரும்ப உதவி கிடைக்க வைக்கும் தூண்டிலாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இஸ்லாம் நன்றி கூறும் வார்த்தையை ஆத்மார்த்தபடுத்துகிறது. ‘ஜஸாக்கல்லாஹ் ஹைரன்’ என்றால் ‘இறைவன் உங்களுக்கு நற்கூலியை வழங்குவானாக’ என்று அர்த்தம். ஜஸாக்கல்லாஹ் ஹைரன் கூறிய சகமுஸ்லிமுக்கு முஸ்லிம் ‘வா இய்யாக்க’ என்றோ ‘ஜாமீஉன்’ என்றோ ‘ஆமீன்’ என்றோப் பதில் கூறுவர். இஸ்லாமில் வெறும் சம்பிரதாயமான வார்த்தைகளுக்கு இடமே இல்லை!”

நெகிழ்ந்தார் ஹரணி.


மகன் மருமகள் பேரன் மற்றும் என் மனைவி ஹரணியை வரவேற்றனர். ஹரணிக்கு தனிப் படுக்கையறை ஒதுக்கப்பட்டது.

காலையில் இடியாப்பமும் பாயாவும்.

மனைவி வகிதா ஹரணியிடம், “உங்களுக்கு மட்டன் பிரியாணி பிடிக்குமா, சிக்கன் பிரியாணி பிடிக்குமா?”

“உங்கள் விருப்பம் போல...”

மதியம் ஜுஆம்மா தொழக் கிளம்பினேன்.

ஹரணி, “நீங்க தொழுறதை நானும் பார்க்க வரலாமா?”

வந்தார்.

வீடு திரும்பினோம். பிரியாணி சாப்பிட்டு முடித்ததும் அவரிடம் மாலைமதி நாவலை வழங்கினேன். “ஹரணி! மாலைமதியில் நான் ‘லப்டப் லடாக்’ நாவல் எழுதியுள்ளேன். நாவலின் 16அத்தியாயங்களில் முகப்பு கவிதைகளாக உங்கள் என்பா கவிதைகளைப் போட்டுள்ளேன்...”

நான் எதிர்பாராவிதமாக ஹரணி “ஜஸாக்கல்லாஹ் ஹைரன்!” என்றார்.

பதிலுக்கு நான் “வா இய்யாக்க!’‘ என்றேன். இரு மதங்களும் அங்கே இசுலாமிய வழக்குச் சொற்களால் இணைந்து கொண்டிருந்தன.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p6.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License